கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரின் மனைவி நடிகை அனுஷ்கா சர்மா காதலித்து திருமணம் செய்து கொண்டனர், சமீபத்தில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

இவர்கள் சமீபத்தில்,முதுகெலும்பு தசை குறைபாட்டால், பாதிக்கப்பட்ட சிறுவன் அயனாஷ்க்கு தேவையான 16 கோடி மதிப்புள்ள மருந்தை வாங்க, தங்களால் இயன்ற உதவியை செய்து வந்தனர். தற்போது சமூக ஊடகங்கள் வழியாக 16 கோடி ரூபாயை திரட்டி அந்த சிறுவனுக்கு உதவி செய்துள்ளனர்.
நோய்வாய்ப்பட்ட தங்கள் குழந்தைக்கு பணம் திரட்ட ஆயன்ஷின் பெற்றோர் சமூக ஊடகங்களில் உதவி கோரியிருந்தனர். அவரது சிகிச்சைக்காக அவர்கள் ‘அயன்ஷ்பைட்ஸ்மா’ என்ற ட்விட்டர் கணக்கை உருவாக்கி, கோலி மற்றும் அனுஷ்கா உள்ளிட்ட பல பிரபலங்கள் சோல்கென்ஸ்மாவை வாங்குவதற்கு ஆதரவளிப்பதைக் கண்டனர். இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை, அயன்ஷின் பெற்றோர் ட்விட்டரில் வெற்றிகரமாக மருந்து கிடைத்து விட்டதாக தகவல் அளித்தனர்.

“#Saveayaanshgupta க்கு நாங்கள் மேற்கொண்ட இந்த கடினமான பயணம் ஆனால், இது அழகாக முடிவடையும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. நாங்கள் 16 கோடியை அடைந்துவிட்டோம் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும், எங்களை ஆதரித்த ஒவ்வொரு நபருக்கும் ஒரு பெரிய நன்றி. இது உங்கள் வெற்றி ”என்று அவர்கள் கணக்கிலிருந்து ட்வீட் செய்துள்ளனர்.
@imVkohli & @AnushkaSharma – we always loved you as fans. But what you have done for Ayaansh and this campaign is beyond what we expected. Thanks for your generosity. You helped us win this match of life with a six! Will always be indebted for your help to #saveayaanshgupta pic.twitter.com/vJUozH2o2r
— AyaanshFightsSMA (@FightsSma) May 23, 2021
தங்கள் மகனின் உயிரைக் காப்பாற்றியதற்காக கோஹ்லி மற்றும் அனுஷ்கா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.







