கடலை எண்ணெயில் தோசை சுட்டு நிலக்கடலையில் சட்னி அரைத்து அதனை உண்டு வளர்ந்தவர்கள் நாம். பார்க் , சினிமா , பீச் என்றாலே எல்லோருடைய கைகளிலும் அலங்கரிப்பது ஆவி பறக்கும் கடலை அல்லது மொறுமொறுப்பான வறுத்த கடலை தான்.இந்த கடலை நம்முடன் இணைந்த எண்ணெய் வித்து. ஆனால் இதனை உண்டால் ஒவ்வாமை என்பது இந்தியர்களுக்கு அதிர்ச்சி தரும் விஷயம் ஆனால் அமெரிக்கர்கள் கடலை என்று உச்சரித்தாலே பறந்தடித்து ஓடி விடுவார்கள். ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் பெரும்பாலானோர் நிலக்கடலை ஒவ்வாமையால் அவதிப்படுபவர்கள் தான்.

நிலக்கடலை ஒவ்வாமை
நிலக்கடலையால் உடலில் ஏற்படும் ஒவ்வாமை சமயங்களில் உயிரைப் பறிக்கும் அபாயம் உள்ளது. உலகெங்கும் உணவுப் பொருள்களால் ஏற்படும் ஒவ்வாமைகளில் பொதுவானது பால் சாப்பிடுவதால் ஏற்படுவது தான். முட்டை, சோயா மற்றும் பட்டாணி போன்றவற்றைச் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய ஒவ்வாமைகளால். தீவிரப் பாதிப்புகள் எதுவும் ஏற்படுவதில்லை

ஒவ்வாமை விகிதம்:
நிலக்கடலை ஒவ்வாமை அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற அமெரிக்க , ஐரோப்பிய நாடுகளில் அதிகமாகக் காணப்படுகிறது. 100 பேரில் 2.5 என்ற அளவில் நிலக்கடலை ஒவ்வாமை காணப்படுவதாக அவர்கள் நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.சமீபகாலங்களில் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலை நாடுகளோடு ஒப்பிட்டால் இந்தியாவில் இதன் பாதிப்பு குறைவு என்றாலும், சமீபத்திய தவறான உணவு பழக்கத்தால் நாளுக்கு நாள் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நிலக்கடலை ஒவ்வாமை இருப்பது தெரிந்தால் அதனை உங்கள் குடும்பத்தினரின் மருத்துவக்குறிப்பேடுகள் , குடும்ப மரூத்துவரிடம் தெரியப்படுத்த வேண்டும். வருமுன் காப்பது தான் சாலச்சிறந்தது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







