காதலையும் அவர்கள் மேல் வைத்திருக்கும் அன்பையும் உங்கள் மனைவியிடம் அவ்வபோது மீண்டும் மீண்டும் நியாபகப்படுத்தாமல் இருந்தால், காதல் மெல்ல வாடிப் போய்விடும். இந்த தகவல்களை தினந்தோறும் உங்கள் மனைவியிடம் கூறத் தொடங்குங்கள்.
கணவன்-மனைவி உறவுக்குள் அன்பும், அக்கறையும்:
கணவன் – மனைவி உறவுக்குள் அன்பையும், அக்கறையும் கொண்ட தகவல் பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தை நாம் மறந்து போய்விடுகிறோம். ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குப் பிறகு, நீங்கள் செய்த ரொமான்டிக்கான எல்லா பேச்சுவார்த்தைகளையும் நடத்தி முடித்து விட்டதாக நினைத்துக் கொள்வீர்கள், தினந்தோறும் உங்கள் இருவருக்குமான உறவை மிகவும் சலிப்பூட்டும், வழக்கங்களுக்குள் சுருக்கிக் கொள்வீர்கள்.
உறவுகளுக்குள் இவ்வாறு செய்வதில் உள்ள பிரச்சனைகள் என்னவென்றால், காதலையும் அதன் மீது உள்ள ஈடுபாட்டையும் அவ்வபோது மீண்டும், மீண்டும் உறுதிப்படுத்தாமல் இருப்பதால், காதல் மெல்ல வாடிப் போய்விடும். அதனால் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படக் கூடும். அதனால்தான் நீங்கள் தகவல் பரிமாற்றத்திற்கு கவனமாக முயற்சிகள் செய்ய வேண்டும். அந்த முயற்சிகளுக்குத் தொடக்கமாக தினந்தோறும் இந்த தகவல்களை உங்கள் துணையிடம் கூறத் தொடங்குங்கள்.
கணவன் மனைவி உறவில் அன்னியோன்யம்:
கணவன்-மனைவி உறவில் ஒரு ரொமான்டிக் மகிழ்ச்சிக்கு அஸ்திவாரமாக இருப்பது, கவனமுடன் பேசுவதை கவனித்து சரியாக பதில் அளிப்பதாகும். அதனால் நீங்கள் தினந்தோறும் அவள் சொல்வதை நான் (கவனமாக) கேட்கிறேன்”என்று சொல்லுங்கள். வேறொரு வகையில் விலகிச் சென்றால் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக் கொள்கிறீர்கள், ஒருவர் மட்டுமே பேசிக் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான வழியாக இது இருக்கும்.

உங்களை நெருக்கமாக்குவதற்கு மிகவும் இந்த சொல் உதவக்கூடியது. உங்கள் கணவர் ஒவ்வொரு முறையும் உங்களுக்காக செய்யும் சிறிய அல்லது பெரிய செயல்களுக்கும் “நன்றி” சொல்ல மறக்காதீர்கள். வெளிப்படையாகக் உங்கள் நன்றியை கூறுவதற்கு போதுமான நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவரையொருவர் நிறைவான உறவுக்கு அங்கீகரித்து பாராட்டுவது முக்கியமானது.
மன்னிப்பு கேளுங்கள், நீங்களும் மன்னியுங்கள்:
ஒரு தம்பதியாக இருவரும் எந்த பிரச்சனைகள் வந்தாலும் இந்த வார்த்தைகளால் நீங்கள் சேர்ந்து இருக்கிறீர்கள். அப்படியே தொடரப் போகிறீர்கள் என்பதைச் சுட்டிக் காட்டும். உறவில் பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால் ஒருவரை ஒருவர் நீங்கள் விட்டு விலகி, தனிமையில் சிக்கலை எதிர்கொள்ள விட மாட்டீர்கள் என்று இது தெரிவிக்கிறது. நீங்கள் ஒவ்வொரு விஷயங்களையும் பரிமாறிக் கொள்வதால் உங்கள் இருவரில் ஒருவர் தவறு செய்தாலும், நீங்கள் சேர்ந்து பணியாற்றி பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வீர்கள் என்று இந்த சொற்கள் உறுதிப்படுத்தும்.

நீங்கள் வருத்தம் தெரிவித்தலும், மன்னிப்பு கோருதலும் செய்த தவறை ஒப்புக் கொள்ள தயாராக இருக்கிறீர்கள் என்பதை வெளிக்காட்டுகிறீர்கள். நீங்கள் பிடிவாதம் சந்தோஷத்தைத் தராது என்று உணருவதாகவும் காட்டுகிறது. இந்த எளிமையான ஆனால் சக்தி வாய்ந்த சொற்கள். இது, பல்வேறு உறவு சிக்கல்களை தீர்த்து வைத்திருக்கின்றன.

இது வெளிப்படையாக என்று நினைத்தாலும் நாம் ஒரு உறவின் வெளிப்படையான விஷயங்களை அடிக்கடி மறந்து போய்விடுகிறோம். முடிந்தவரை நீங்கள் இப்படி அன்பும் அக்கறையுமாகா கலந்து பேசினால் உங்களுக்குள் மாயாஜாலம் மறையாமல் இருக்கும். உங்கள் கணவரை பாராட்டுவது, எப்போதும் கொஞ்சம் கிளுகிளுப்பாக பேசுவது போன்றவை உற்சாகத்தை மீட்டுக் கொண்டு வரும்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News








