
சாம்பார் வரலாறு
சாம்பார் என்றும் சாம்பரம் என்றும் அழைக்கப்படும் இந்த உணவு வகை தமிழகத்தின் கண்டுபிடிப்பு. தஞ்சை சரபோஜி மன்னரின் காலத்தில் கண்டறிந்த உணவு என்று ஒரு கருத்து நிலவுகிறது. தஞ்சை வாழ் மராத்தியர்கள் கொண்டு வந்த ரெசிபி என்பதை மறுத்து கூற நம்மிடம் சான்றுகள் உள்ளன.
சான்றுகள்
தமிழக கல்வெட்டு 1530 C.E பதிவின் வாயிலாக இது தமிழர்களின் பூர்வீக உணவு என்பது உறுதியாகிறது.
“அமுதுபடி கறியமுது பல சம்பாரம் நெய்யமுதுள்ப்பட தளிகை ஒன்றுக்கு பணம் ஒன்றாக,”
(South Indian Inscriptions, IV, 503, 1530 CE, Srirangam Temple, East Wall, Second Prakara, a Nayak Era Gift to Sri Ranga Natha[2])
என்பதே அந்த கல்வெட்டின் பதிவு.
“கறியமுது பல சம்பாரம்”—- பல காய்கறிகளை கொண்டு உணவு படைத்தல் என்பதே மேற்கண்ட பாடலின் பொருள்.
“நெய்யமுதுள்ப்பட தளிகை ஒன்றுக்கு பணம் ஒன்றாக”—- அதாவது நெய் சேர்ந்த உணவை பணம் ஒன்றுக்கு கொடு,
மாராட்டியர்களின் ஆட்சியின் கீழ் தஞ்சை 1675 ல் தான் வந்தது. அதற்கு முன்பே கல்வெட்டில் சாம்பாருக்கான சான்றுகள் உள்ளது. தமிழில் சாம்பு என்றால் குறைத்தல் அரைத்தல் என்று பொருள் அரைத்த தேங்காய் அல்லது தானியங்கள் என்று கூறலாம்.
சாம்பாரின் வகைகள்
பட்டியலிட இடம் பற்றாது இருப்பினும் முயற்சி செய்து பார்க்கலாம்.
* கதம்ப சாம்பார் அல்லது கல்யாண சாம்பார்
* அரைத்துவிட்ட சாம்பார்

* இட்லி சாம்பார்

நமது தமிழக சாம்பாரும், கேரள சாம்பாரும் அதிக ருசியும், மணமும் கொண்டது. ஒவ்வொரு பெண்ணின் கைமணமும் சாம்பாரில் மணக்கும் என்பது அந்த காலம். ஒவ்வொரு பிராண்ட் சாம்பார் மசாலாவுக்கு ஏற்ப சாம்பார் மணக்கும் என்பது இந்த காலம்.
Sambar, also spelled sambhar/sambaar is a popular recipe in South India as it is originated in Tamil Nadu. Vegetables such as carrot, brinjal, pumpkin, , drumstick, bottle gourd, ash gourd, sambar cucumber, tomatoes, french beans when added to sambhar it gives unique delicious taste. Idli sambar/Tiffin sambar is suitable for all idli and dosa varieties. Indian spices like coriander seeds, cumin seeds, mustard seeds, black peppercorns, dry red chilies, fenugreek seeds, cinnamon are used to make sambar powder that helps to make sambar easily.







