
பருப்பு உருண்டை செய்வதற்கு தேவையான பொருட்கள் :
கடலைப்பருப்பு – 1/2 கப்
மிளகாய் வத்தல் – 4
உப்பு – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – 4 சிட்டிகை
எண்ணெய் – 4 தேக்கரண்டி
தாளிக்க
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
கருவேப்பிலை – 2 இணுக்கு
மோர் குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள் :
தயிர் – 2 கப் (கட்டி இல்லாமல் கடைந்து கொள்ளவும்)
தேங்காய் துருவல் – 3/4 கப்
பச்ச மிளகாய் – 4
சீரகம் – 1 தேக்கரண்டி
உப்பு – 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி – 2 சிட்டிகை
தாளிக்க :
கடுகு
உளுத்தம்பருப்பு
மிளகாய் வத்தல்
கருவேப்பிலை
பெருங்காயம் – 1 சிட்டிகை
தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை – பொடியாக நறுக்கியது
செய்முறை :
* பருப்பை அரைமணிநேரம் ஊறவைத்து பின்னர் பச்ச மிளகாய் மிளகாய் வத்தல் உப்பு பெருங்காயம் சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.

* இட்லி தட்டில் வைத்து மூடி ஐந்து முதல் பத்து நிமிடம் வரை வேக விடவும். அல்லது எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
* வேகவைத்த பின்னர் தனியாக எடுத்து ஆற விடவும்
* மிக்ஸியில் தேங்காய் துருவல் பச்ச மிளகாய் சீரகம் சேர்த்து அரைக்கவும்.
* தயிரில் அரைத்த விழுதை சேர்த்து கலந்து கொள்ளவும்.
* உப்பு மஞ்சள்பொடி சேர்க்கவும்.
* ஆறவைத்த உருண்டைகளை மோர் குழம்பில் போட்டு ஒரு கொதி விடவும்.
* கரண்டியால் மெதுவாக உருண்டைகளை திருப்பிவிடவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
* கொத்தமல்லி தழை தூவினால் ருசியான பருப்பு உருண்டை மோர் குழம்பு தயார்.
Paruppu Urundai Mor Kuzhambu is a popular delicious recipe in TamilNadu. It is also called Bonda More Kuzhambu. The recipe made with dal and butter milk is served as a curry for lunch. Easy steps to make paruppu urundai and more kuzhambu are give above. Follow the steps to prepare this yummy recipe.







