உலகிலேயே வைத்து சர்க்கரை நோயாளிகள் அதிகம் இருப்பது இந்தியாவில் தான். அதற்கு முழுக்காரணம் நமது உணவுப்பழக்கம் தான்.டைப் 2 டயபடிஸ் நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பது என்பது பெரும் பிரச்சினை.ஆனால் சமீபத்திய ஆய்வுகள் ஒரு சாதாரண பொருள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயர்வதை தடுக்கிறது என்பது வரவேற்க்க வேண்டிய விஷயம்.விலை மலிவும் எளிதாக கிடைக்கும் வெங்காயம் என்பது தான் பெரு மகிழ்ச்சி தரும் விஷயம் ஏனெனில் எவருக்கும் பயன்படுத்த முடியும் என்பது தான்.

டைப் 2 டயபடிஸ் :
டைப் 2 சர்க்கரை நோயால் உடல் அணுக்கள் இரத்தத்தில் இருந்து சரியான குளுக்கோஸ் அளவை எடுத்து கொள்ள முடியாது, அதனால் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகம் ஆகிவிடும்.இன்சுலின் எதிர்ப்பு என்றால் உடல் சரியான அளவில் குளுக்கோஸை உற்பத்தி செய்தாலும் உடல் அணுக்களால் சரியான அளவில் இன்சுலினை கிரகித்து கொள்ள முடியாது. காலப்போக்கில் கணையமும் இன்சுலின் உற்பத்தியை மட்டுபடுத்திவிடும். இந்த வகை சர்க்கரை நோயில் நரம்பு மண்டலம் பாதிப்பு அடைந்து உடலின் முக்கிய உறுப்புகள் செயலிழக்கிறது மேலும் எளிதாக ஈஸ்ட் தொற்று , சிறுநீரக தொற்று என தொற்று நோய்க்கு ஆளாகுகிறார்கள். இதற்கு தீர்வாக சமீபத்திய ஆய்வுகள் வெங்காயத்தை தெரிவிக்கின்றன.

வெங்காயம் சர்க்கரையின் அளவை குறைக்குமா?
வெங்காயத்தில் உள்ள quercetin and sulphur எனும் வேதிப்பொருட்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும். நூறு கிராம் பச்சை வெங்காயத்தை சாப்பிட்ட நான்கு மணி நேரத்தில் fasting அதாவது உணவுக்கு முன் சர்க்கரையின் அளவு குறைந்து இருந்தது. Quercetin உள்ள செல்கள் அனைத்திலும் உள்ள அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. எளிதாக சர்க்கரை அளவை குறைக்க வெங்காயம் சேர்த்து காய்கறி சாலட் மூன்று வேளை உணவிலும் திட்டமிட்டு உண்டாலே போதும். கார்போஹைட்ரேட் குறைந்த உணவுகள் , நடைப்பயிற்சி உடன் உணவுக்கட்டுப்பாடு இருந்தால் போதும்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






