இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால், அனைத்து மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி மார்ச் 17ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்.

தமிழகத்தில் நேற்று மட்டும் 835 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஒரே நாளில் 800 ஐ தாண்டியுள்ளது. கோவிட் தடுப்பூசி மாநிலத்தில் எந்த அளவுக்கு செலுத்தப்பட்டு வருகிறது என்பதை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
