
எவர் கிவன் கப்பல் கடந்த ஆறு நாட்களாக மீட்பு பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று அந்தக் கப்பல் மீட்கப்பட்டன. அதனை தொடர்ந்து மிதக்கும் நிலைக்கு வந்துள்ளது.
எவர் கிவன் கப்பலை மீட்டெடுக்கும் வேலையில் நேற்றைய தினம் சுமார் 18 மீட்டர் ஆழத்திற்கு கரைகள் தோண்டப்பட்டு 27,000 கியூபிக் மீட்டர் அளவிலான மணல் வெளியேற்றப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 23-ம் தேதி ‘செவ்வாய் கிழமை’ எவர் கிவன் என்ற ராட்சத சரக்குக் கப்பல் எகிப்தின் சூயஸ் கால்வாயில் சிக்கின. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ70,000 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்து, அந்தப் பகுதியின் கடல் வர்த்தகம் பாதிப்புக்குள்ளானது.






