
நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் கட்ட நோய் தொற்று அலையால் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக இன்று பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் காணொளியில் ஆலோசனை மேற்கொண்டார். சில மாநிலங்களில் நோய் தொற்று அதிகமாக உள்ளதை சுட்டிக் காட்டி போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கை முடக்கிவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஒரு சில மாநிலங்களில் நடவடிக்கைகள் மெதுவாக நடந்து வருவதை அதிருப்தி தெரிவித்தார். மேலும், மாநிலங்களில் இறப்பு விகிதத்தை குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.அதை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது வரவேற்க தக்கது. அடுத்து நாட்டின் பொருளாதாரத்தில் எந்த சமரசமும் செய்ய முடியாது என்பதால் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்த தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.
தொற்று பாதிக்கப்பட்ட பகுதியை ஒட்டுமொத்தமாக இல்லாமல் பாதிக்கப்பட்ட பகுதியை மட்டுமே தனிமைப்படுத்தலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளார். மேலும், கொரோனா பரிசோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் நோயால் பாதிக்கப்பட்டோரின் தொடர்பில் இருந்த 30 பேரையாவது கண்டறிந்து பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்.

மேலும், தடுப்பூசி வீணாவதை தடுக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 45 வயதுக்கு மேற்பட்டோர் 100 % கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் அரசியல் தேவையில்லை என்றும், நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே நோக்கம் என்றும் பிரதமர் கூறியுள்ளார். இதற்கு, முன்பு இருந்த கொரோனாவை தோற்கடித்த நாம், மீண்டும் அதனை வீழ்த்த வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






