கடந்த சில நாட்களாக துருக்கியில் தினமும் கொரோனா பாதிப்புகள் 35 ஆயிரத்தை கடந்தது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 37,312 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,67,281 ஆக உயர்ந்துள்ளது. அதை தொடர்ந்து கொரோனா தோற்று பரவலை கட்டுப்படுத்த ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் மே 17 வரை துருக்கியில் முழு ஊரடங்கினை துருக்கி அரசு பிறப்பித்துள்ளது.
நாட்டில் ஒரு நாள் பாதிப்பு 5 ஆயிரத்துக்கும் கீழ் குறைப்பதே தற்போதைய இலக்கு என்றும் துருக்கி அதிபர் அறிவித்துள்ளார். துருக்கியில் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இஸ்தான்புல் நகர வீதியில் வெறிச்சோடி காணப்பட்டன .
பள்ளிகள் மூடப்படுவதாகவும், ஒரு மாகாணத்திலிருந்து மற்றொரு மாகாணத்துக்கு முன் அனுமதியுடன் மட்டுமே மக்கள் பயணிக்க முடியும் என்றும், மாகாணங்களுக்கு இடையே 50 சதவீத பொதுப் போக்குவரத்து மட்டுமே இயக்கப்படும், மருத்துவ சேவைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் அனுமதி என்றும் துருக்கி அதிபர் அறிவித்துள்ளார்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News