ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டதால் கணவனை கூலிப்படை வைத்து மனைவியே கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் நஞ்சப்ப நகரை சேர்ந்த சீனிவாசன், பிரபா இணையருக்கு கனிஷ்கா என்ற மகள் உள்ளார்.
சீனிவாசன் சலூன் கடை நடத்தி வந்தார், இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சீனிவாசனுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அவரது மனைவி பிரபா அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஸ்ரீனிவாசனின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். https://www.veterinary-practice.com/ buy alprazolam
தகவல் அறிந்து அங்கு சென்ற உறவினர் மாரிமுத்து என்பவர் சீனிவாசனின் உடலைப் பார்த்தபோது, கழுத்தில் காயம் இருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றார். அவர் அளித்த புகாரையடுத்து போலீசாரின் விசாரணையில் சீனிவாசனை அவரது மனைவி பிரபாவே கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து பிரபா போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில், கணவர் சீனிவாசன் தனது நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகாத வார்த்தையில் பேசியதால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு, சலூன் கடை வெள்ளியங்கிரி மற்றும் பரோட்டா மாஸ்டர் சரவணகுமார் ஆகிய இருவரின் உதவியுடன் சீனிவாசனை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News