பாலியல் தொல்லை புகாரில் கைது செய்யப்பட்ட பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளர்.
சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்புகளில் மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அரைகுறை ஆடையுடன் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டதாகவும் நேற்றைய தினம் புகார் எழுந்தது.
கடந்த ஆண்டுகளில் பலமுறை இவர் மீது புகார்கள் தெரிவிக்கப்பட்ட போதும் நிர்வாகம் இதை கண்டு கொள்ளவில்லை என கூறி புகார்களை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகம் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
தொடர்ச்சியான அழுத்தங்களை தொடர்ந்து ஆசிரியர் ராஜாகோபாலனை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜூன் 8ஆம் நாள் வரை சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி ராஜகோபாலன் தற்போது செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News