கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கொரோனா நோயாளிகள் 3 ஆயிரம் பேர் தலைமறைவாக உள்ளதாக அமைச்சர் அசோக் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பரிசோதனைகளை அதிகரிக்க சுகாதாரத் துறைக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.இந்த நிலையில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் அவர்கள் தங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிகள் ஆனால் தனிமைப் படுத்தி விடுவார்கள் என்ற அச்சத்தில் பெயர் செல்போன் எண்களை மாற்றி கொடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி உள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அசோக் பெங்களூருவில் கொரோனா பரிசோதனை முடிவுகள் அவரவர்களின் செல்போன்களுக்கு குறுந்தகவல் ஆக அனுப்பப்படுகிறது எனவும் இதில் கொரோனா பாதிப்பு உறுதியான நோயாளிகள் தங்களின் வீடுகளை காலி செய்து விட்டு சென்று விட்டனர் என்றும் தற்போதைய சூழ்நிலையில் போலீசார் மூலமும் அவர்களை தேடிக் கண்டுபிடிப்பது கடினம் என தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பு உறுதியானவர்கள் தயவுசெய்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள் தலைமறைவாகி விடுவது சரியான நடவடிக்கை அல்ல எனவும் அமைச்சர் அசோக் கேட்டுக்கொண்டார்
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News