ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் தங்களுடைய நிறுவனத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உணவு பொருட்களை விநியோகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்களுடைய பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், தடுப்பூசி போட தகுதி உள்ளவர்களுக்கு இலவசமாக நிறுவனத்தின் செலவிலேயே தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்குச் சென்று உணவு பொருட்களை வழங்கி வரும் ஊழியர்களுக்கு கொரோனா பரவும் ஆபத்து இருப்பதால் முதல் கட்டமாக அவர்களுக்கு தடுப்பூசியை செலுத்த முன்னுரிமை அளிக்கப்படுவதாக ஸ்விக்கி நிறுவனத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்