இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார்(37) ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்றவர். டெல்லி ஷத்ரஸால் அரங்கில் கடந்த 4-ம் தேதி சுஷில் குமார் தரப்பினருக்கும், இளம் மல்யுத்த வீரர் சாகர் ராணா தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த சாகர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளாக சுஷில் குமாரும் அவரது நண்பர் அஜஸ் குமார் என்பவரும் அறிவிக்கப்பட்டார்கள். இவர் மீது ஜாமினில் வெளியே வர முடியாத ‘பிடிவாரன்ட்’ பிறப்பிக்கப்பட்டது. சுஷில் குமார் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் சன்மானமும், அஜய் குமார் குறித்து தகவல் அளித்தால். ரூ.50 ஆயிரமும் தரப்படும் என டில்லி போலீசார் அறிவித்தனர். சுஷில்குமார் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு தள்ளுபடியானது.
இந்நிலையில் நேற்று காலை டெல்லியின் முந்த்கா பகுதியில் இரு சக்கர வாகனம் மூலம் தப்பிச் செல்ல முயன்ற சுஷில் குமாரை மடக்கிப் பிடித்து காவல் துறையினர் அவரை கைது செய்தனர். அவருடன் இருந்த அஜய் குமாரும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News