ஆந்திர மாநிலம் தடா அருகே கஞ்சா வியாபாரியை பிடிக்க சென்ற போது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் மதுரவாயல் உதவி ஆய்வாளர் உள்பட இரண்டு போலீசார் படுகாயம் அடைந்தனர். சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, போரூர், வளசரவாக்கம், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. இளைஞர்கள், மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்யப்பட்டு வரும் கஞ்சா ஆந்திராவில் இருந்து மொத்தமாக கடத்தி வரப்பட்டு இங்கு பொட்டலங்களாக பிரிக்கப் பட்டு சில்லரை விற்பனை செய்யப்படுகிறது .
இதையடுத்து மதுரவாயல் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் அவர்களை பிடிப்பதற்காக ஆந்திர மாநிலம் தடாவுக்கு சென்றனர். இன்று அதிகாலை நேரத்தில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த கஞ்சா வியாபாரியை போலீசார் பிடிக்க முயன்ற பொது கஞ்சா வியாபாரிகள் அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் காலில் காயம் ஏற்பட்டது. இதில் ஆய்வாளர் சுதாகருக்கு காது கிழிந்தது மற்றோருவருக்கு காலில் காயம் ஏற்பட்டது, காயமடைந்த காவலர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகின்றனர். இவ்வழக்கில் தற்போது 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஆந்திர போலீசார் மதுரவாயல் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News