அனைவரும் விரும்பி உண்ணும் ஆரஞ்சு பழத்தில் இருக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கு காண்போம். இப்பழத்தில் புரோட்டீன், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, தையாமின், பொட்டாசியம், வைட்டமின் ஏ, கால்சியம், வைட்டமின் பி-6, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்து காணப்படுகிறது.
இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது. இந்தப் பழத்தை கமலா பழம் இன்றும் அழைப்பர். இது உடலுக்குத் தேவையான அனைத்து உயிர்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன.
விந்தணுக்களை உருவாக்கும்:
அதிக அளவில் உள்ள வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.மேலும் ஆரோக்கியமான குழந்தை பிறப்பதில் ஆரஞ்சு பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. ஏனென்றால் இதில் உள்ள ஃபோலேட் என்னும் ஊட்டச்சத்து ஆரோக்கியமான விந்தணுக்கள் உருவாக்கத்திற்கு உதவுகிறது . இதனால் குழந்தைகள் ஆரோக்கியமாக பிறக்கின்றன.
சிறுநீரக பாதுகாப்புக்கு உதவுகிறது:
பழத்தில் சிட்ரிக் ஆசிட் எனும் அமிலம் அதிகமாக உள்ளதால் சிறுநீரகம் தொடர்பான நோய்களை குறைக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இது உடலில் ஏற்படும் அதிகப்படியான கொழுப்பை கரைத்து வெளியேற்ற பெரிதும் பயன்படுகிறது.
மருத்துவ பயன்கள்:
- இப்பழம் அதிக மருத்துவ குணங்களை கொண்டது. இது ஜீரண சக்தியை அதிகப்படுத்தி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுக்களை வெளியேற்றுகிறது.ரத்த குழாய்களில் சேரும் கெட்ட கொழுப்பை அகற்ற ஆரஞ்சு பழம் பயன்படுகிறது. மேலும் இதய பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
- மேலும், இது உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை உணவு சாப்பிடும் முன் ஆரஞ்சு பழத்தை ஜூஸாக குடித்து வருவது நல்லது. பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தினந்தோறும் பெண்கள் இதை எடுத்துக் கொண்டால் பெண்களுக்கு 50% புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறையும்.
- இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் உடலில் புற்று நோயை உருவாக்கும் செல்களை அழித்து உடலை பாதுகாத்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இது உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.
- மேலும், முடி கொட்டுவது தொடர்பான பிரச்சனையை தீர்க்கிறது. இதில் ஆண்களுக்கு விந்தணுக்களை அதிகரிக்கும் சக்தி ஆரஞ்சு பழத்திற்கு உண்டு. இப்பழத்தில் உள்ள போலேட் ஆண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. விந்தணுக்களை ஆரோக்கியமாக மாற்றி மலட்டுத்தன்மை பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.
- இப்பழம் பல் பிரச்சனைகளை தீர்க்கும். வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் ஆரஞ்சு பழத்தை சேர்த்துக் கொள்ளலாம். நமது ஈறுகளில் வீக்கம், சொத்தை பல், வாய் கிருமிகளை கட்டுப்படுத்தும்.மேலும், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் தூங்குவதற்கு முன் ஆரஞ்சு பழ சாறுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நன்றாக தூக்கம் வரும்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News