ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே பெண் வேடமிட்டு தம்பதி போல நடித்து குழந்தையை கடத்த திட்டமிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது குழந்தை கடத்தல் மிகவும் தீவிரமாக உள்ளது. இதனால் போலீஸ் தரப்பில் இருந்து பெற்றோருக்கு பல்வேறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன.
தேவிபட்டினத்தை அடுத்த சிங்கநேந்தல் கிராமத்தில் கடந்த சில நாட்களாக பிச்சைக்கார தம்பதியைப் போல இருவர் சுற்றி திரிந்துள்ளனர். இவர்களை கவனித்த அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் சிலர் அந்த பெண்ணிடமும், அவரோடு இருந்த அந்த நபரிடமும் விசாரணை நடத்தியதில், தாங்கள் குழந்தை திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் எனவும், ஒருவன் பெண் வேடமணிந்து யாருக்கும் சந்தேகம் எழாதவகையில் பிச்சை எடுப்பது போல் திரிந்து குழந்தைகளுக்கு மயக்கமருந்து கொடுத்து கடத்திச் செல்வதும் தெரியவந்தது.
இதற்காக 1 லட்சம் ரூபாய் தருவார்கள் என்றும், இதுபோல பல்வேறு இடங்களில் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த இடத்திற்கு சென்ற போலீசார் இருவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News