நொய்யல் அருகே சொட்டையூர் பகுதியில் வசிப்பவர் தினேஷ் (32). மனைவி கற்பகம் (30). இவர் புகளூர் காகித ஆலையில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். திருமணம் ஆகி 4 மாதங்களே ஆன இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
தினேஷின் தாத்தா இறந்த துக்க நிகழ்ச்சிக்காக இருவரும் வீட்டினை பூட்டிவிட்டு சென்றனர். அப்போது தினேசின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த பீரோவையும் உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் நகைகளை திருடி சென்றனர்.
இதனையறிந்த வீட்டுக்கு விரைந்து வந்த தினேஷ் இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.