முகத்தில் இருக்கும் சருமத்தை சுத்தம் செய்ய அவசியம் ஸ்க்ரப்பிங் செய்ய வேண்டும்.ஸ்க்ரப் செய்வதால் சருமத்துக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்க செய்கிறது. இது சரும பிரச்சனைகளை தடுக்க செய்கிறது. இதற்கென பிரத்யேகமான வீட்டு பொருள்கள் இருந்தாலும் முக்கியமான சிலவற்றை மட்டுமே பயன்படுத்தி ஸ்கரப் செய்து முகத்தின் பளபளப்பை கூட்டுவது என்று பார்க்கலாம்.
தேங்காய் ஸ்க்ரப்
தேங்காய் சாப்பிடுவது சுவையானது. அதே போன்று சருமத்தில் பயன்படுத்தும் போது நன்மை பயக்கக் கூடியது.தேங்காய் முகத்தில் இருக்கும் அழுக்குகளை விரைவாக வெளியேற்ற உதவும் சிறந்த பொருள் . நேரடி சூரிய ஒளியால் சருமம் பாதிக்கப்படுகிறது. இதை சரி செய்வதற்கு தேங்காய் ஸ்க்ரப் உதவக்கூடும்.
தேங்காயை துண்டுகளாக்கி மசிக்கவும். மஞ்சள் 1 சிட்டிகை கலந்து அதில் சந்தன எண்ணெய் 10 துளிகள் சேர்க்கவும். இந்த கலவையை 5 நிமிடங்கள் முகத்தில் மென்மையாக ஸ்கரப் செய்து பிறகு முகத்தை கழுவி எடுக்கலாம். சருமத்துக்கு ஈரப்பதத்தையும் குளிரூட்டும் வேலையையும் இது செய்கிறது.
சரும மென்மைக்கு கேரட்
சருமத்திற்கு கேரட் ஸ்க்ரப் கூடுதல் நன்மை தரக்கூடியது. இது சர்மத்தை மென்மையாகவும் பொலிவாகவும் வைத்திருக்க செய்யும். கேரட் எல்லாவிதமான சருமத்தினருக்கும் ஏற்றது.
தேவை
கேரட் – 1
தயிர் – 5 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
பன்னீர் – 3 டீஸ்பூன்
அனைத்தையும் நன்றாக கலந்து வட்ட வடிவில் முகத்தில் இயக்கவும். வாரம் இருமுறை இந்த ஸ்க்ரப் பயன்படுத்துவதன் மூலம் முகத்தின் எண்ணெய் சுரப்பும் கட்டுக்குள் இருக்கும்.
ஆரஞ்சு தூள் ஸ்க்ரப்
இறந்த செல்களை ஆரஞ்சு சருமத்தில் வெளியேற்ற உதவுகிறது. வெயிலில் ஆரஞ்சு தோலை உலர்த்தி பொடியாக்கி ரவை போன்ற சலித்து வைக்கவும்.
இதில் தயிர் அல்லது பால், எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் பதத்துக்கு ஆக்கி முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். ஆரஞ்சு தூள் ஸ்கரப் எல்லா சருமத்தினருக்கும் ஏற்றது.
பாசிப்பருப்பு ஸ்க்ரப்
லேசாக பாசிப்பருப்பை வறுத்து பொடியாக மாற்றவும். அவசர காலத்தில் இதனுடன் தேன் கலந்து பேஸ்ட் ஆக்கவும். இதை கழுத்து மற்றும் முகத்தில் தடவி விடவும். பிறகு ஈரமான பருத்தியை நனைத்து முகத்தில் துடைத்து பிறகு முகத்தை கழுவி எடுக்கவும். இதில் சர்க்கரை சேர்ப்பதால் சருமம் ஆற்றல் மிக்கதாக புத்துணர்ச்சியாக இருக்கும்.
இந்த சருமம் பொலிவை பெறுவதற்கு சரியான முறையில் ஸ்க்ரப்பிங் செய்வது அவசியம். உள்ளங்கையில் லேசான அழுத்தத்தை பயன்படுத்தி முகத்தை மசாஜ் செய்யவும். இது ஆழமான சருமத்தின் துளைகளை சுத்தம் செய்ய கூடும்.
பாசிப்பருப்பு பொடி – 4 டீஸ்பூன் அளவு
சர்க்கரை – 1 டீஸ்பூன்
தேன் – 3 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 3 சொட்டு
கற்றாழை – 2 டீஸ்பூன்
நன்றாக அனைத்தையும் சேர்த்து கலந்து ஸ்க்ரப் செய்வதன் மூலம் முகம் அதிக பொலிவை பெறுவதை பார்க்கலாம்.
சால்ட் ஸ்க்ரப்
சால்ட் ஸ்க்ரப் என்பது முழு சருமத்துக்கும் ஏற்ற ஸ்க்ரப், சருமத்தின் இறந்த செல்களை ஆழமாக சுத்தம் செய்வதற்கு இந்த சால்ட் ஸ்க்ரப் உதவும். இதை அடிக்கடி செய்ய வேண்டியதில்லை இரண்டு வாரத்துக்கு ஒரு முறை செய்தாலே போதுமானது. இது இறந்த செல்களை ஆழமாக சுத்தப்படுத்தும்.
உப்பு – 2 டீஸ்பூன்
மஞ்சள்- 1 சிட்டிகை
முகத்தில் இதை கலந்து தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்து விடவும். இதனால் மேலும் முகத்தின் அழகு பொலிவாக இருப்பதை பார்க்கலாம். உடலுக்கு தேவையெனில் இதையே மென்மையாக மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News